ஆப்கானில் ராணுவத்துடன் 700 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை

ஆப்கானில் ராணுவத்துடன் 700 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை

Terroris

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகேயுள்ள லோகார் மகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. அதில் 700 தலிபான் தீவிரவாதிகள் பங்கேற்றுள்ளனர்.

சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகின்றன. அதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு ஆப்கானிஸ்தான் ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடைபெறும் சண்டையின் மூலம் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் பலம் தெரிய வரும்.