மாஸ் விமான நிறுவனத்திற்கு தொடரும் பிரச்சனைகள்

Mas2

மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த ஒரு ஊழியர் ஒரு பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ப்ரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்டு 4 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பாரிசுக்கு பயணித்த MH20  விமானத்தில் பயணித்த ஒரு பெண் பயணியிடம் அதன் ஊழியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். விமானம் பாரிசை அடைந்ததும் இது சம்பந்தமாக அந்த பயணி பாரீஸ் காவல் துறையிடம் அளித்த புகாரின் பேரில் விசாரனை செய்யப்பட்டு முதல் கட்ட ஆதாரங்கள் மாஸின் ஊழியருக்கு எதிராக இருந்ததால் அவர் ஆகஸ்டு 7ஆம் திகதி கைது செய்ப்பட்டுள்ளார். இந்த தகவலை மாஸ் விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஊழியர்களின் இத்தகைய செய்ல்கள் மாஸ் விமான நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், பனறிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் எனவும் மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.