மலேசியாவட்டாரச் செய்திகள்

20,470 வீடுகளைக் கொண்ட 31 திட்டங்கள் நிறைவு

சிரம்பான், 09/05/2025 : கடந்த ஏப்ரல் மாதம் வரை, நாடு முழுவதும் உள்ள PR1MA மலேசியா கழகத்தின் முழுமை பெறாத 34 வீடமைப்பு திட்டங்களில் 20,470 வீடுகளைக் கொண்ட 31 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுப் பெற்றுள்ளன.

மலாக்காவில் இரண்டும், கெடாவில் ஒன்றும், எஞ்சியிருக்கும் மூன்று PR1MA திட்டங்கள், இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

“முந்தைய அரசாங்கத்திடமிருந்தும் PR1MA-இன் பழைய நிர்வாகத்திடமிருந்தும் இந்த முழுமைபெறாத திட்டங்கள் பெறப்பட்டன. எனக்கு முதன்முதலில் அதிகாரமும் பொறுப்பும் வழங்கப்பட்டபோது, ​​நாடு முழுவதும் 34 முழுமைபெறாத திட்டங்கள் இருப்பதை மதிப்பாய்வு செய்த பிறகு நாங்கள் கண்டறிந்தோம்,” என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை நெகெரி செம்பிலான் ரந்தாவில், Residensi Bandar Ekar வீடமைப்பு திட்டத்தின் சாவி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர், ஙா செய்தியாளர்களிடம் பேசினார்.

நியாயமான காரணமின்றி திட்டங்களைத் தாமதிக்கும் நிறுவன இயக்குநர், வாரிய உறுப்பினர்கள் உட்பட எந்தவொரு குத்தகையாளரோ அல்லது நிறுவனமோ, கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று அவர் விளக்கினார்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews