மலேசியாவட்டாரச் செய்திகள்

பெமலா லிங் கடத்தல் விவகாரம்; ஐந்து கார்கள் அவரை சுற்றி வளைத்தன

கோலாலம்பூர், 08/05/2025 : ஏப்ரல் 9-ஆம் தேதி கடத்தப்பட்டதாக நம்பப்படும் டத்தின் ஶ்ரீ பெமலா லிங் யூ காணாமல் போன சம்பவத்தில் ஐந்து கார்களை உட்படுத்தி சுமார் எண்மர் பயணித்திருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள மறைக்காணியின் பதிவின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.

பெமலா லிங் பயணித்த ஈ-ஹெய்லிங் காரை, டொயொட்டா கெம்ரி, நிசான் அல்மெரா மற்றும் நிசான் தியனா ஆகிய மூன்று கார்கள் இடைமறித்ததும் மற்ற இரு கார்கள் அப்பகுதியைச் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டதும், அந்த மறைக்காணி பதிவில் கண்டறியப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறினார்.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களும், அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் உறுப்பினர்களைப் போன்று உடை அணிந்திருந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.

அதோடு, எவ்வித பிரச்சனைகளுமின்றி பாதிக்கப்பட்டவர் தான் பயணித்த வாகனத்தில் இருந்து இறங்கி சந்தேக நபர்களின் கார் ஒன்றில் ஏறியதையும் மறைக்காணி பதிவில் காண முடிந்தது.

Source : Bernama

#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews