மஞ்சோங்: 46 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருள்கள் பறிமுதல்
ஈப்போ, 08/05/2025 : பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 44 கிலோகிராம் எடைக் கொண்ட 46 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு, இச்சம்பசத்தில் காதல் ஜோடி உட்பட நால்வரைப் போலீசார் கைது செய்தனர்
கடந்த திங்கட்கிழமை, இரவு மணி 7.30-க்கு சித்தியவான், சிம்பாங் திகாவில் உள்ள வீடொன்றில் ஒரு தம்பதியரும் கைதானதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் கூறினார்.
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் 15.6 கிலோகிராம் எடைக் கொண்ட Methylenedioxy-Methamphetamine வகை போதைப் பொருள் இருந்தது கண்டுப் பிடிக்கப்பட்டதாக டத்தோ நோர் ஹிஷாம் கூறினார்.
அதே நாளில், சித்தியவானில் உள்ள தாமான் செஜாத்தி அடுக்குமாடி குடியிருப்பில் 50 வயதுடைய ஆடவரை கைது செய்ததுடன், 127 கிராம் எடைக் கொண்ட கெத்தாமின் மற்றும் எராமின் வகை போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
“ஜேஎஸ்ஜே, ஐபிகே பேராக்கைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, போதைப் பொருள்களைப் பொட்டலமிடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் லுமூட் டெசா மஞ்சோங்கில் உள்ள இரு வீட்டில் மூன்றாவது முறையாக சோதனை நடத்தியது”, என்றார் அவர்.
இதனிடையே, சிறுநீராக பரிசோதனையில் அம்மூன்று சந்தேக நபர்களும் எராமின் வகை போதைப் பொருளை உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் முன்னதாக குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக, அவர் கூறினார்.
Source : Bernama
#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews