இந்தியா & பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் மலேசிய இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்
கோத்தா திங்கி, 08/05/2025 : இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள இராணுவ கல்லூரிகளில் பயிற்சி பெற்று வரும், மலேசியாவைச் சேர்ந்த 21 ஆயுதப்படை அதிகாரிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு இராணுவ கல்லூரிகளில் 18 அதிகாரிகளும் மலேசிய இராணுவப் படை உறுப்பினர்களும் பயிற்சி பெற்று வரும் நிலையில், மூவர் பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
“தாக்குதல் மற்றும் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. அவர்களில் பெரும்பான்மையானவர்களின் பயிற்சி இவ்வாண்டில் நிறைவடையும். எனவே, தற்போது அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்,” என்றார் அவர்.
தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, இரண்டு தெற்காசிய நாடுகளின் தற்போதைய நிலைமைகளை அமைச்சு அவ்வப்போது தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.
Source : Bernama
#MalaysiaIndia
#MalaysiaPakistan
#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews