மலேசியாவட்டாரச் செய்திகள்

6 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து; விசாரணைக்கு உதவ லாரி ஓட்டுநர் கைது

கோலாலம்பூர், 08/05/2025 : குத்ரி நெடுஞ்சாலையில் இருந்து, புக்கிட் சுபாங் சமிக்ஞை விளக்கு பகுதியை நோக்கிச் செல்லும் இடத்தில், நேற்று ஆறு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தின் விசாரணைக்கு உதவ லாரி ஓட்டுனர் ஒருவரை போலீஸ் கைது செய்தது.

பத்து அராங்கில் இருந்து சைபர்ஜெயாவை நோக்கி, மதியம் மணி 1.20-க்கு, 31 வயதுடைய அவ்வாடவர் ஓட்டி சென்ற லாரி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக, சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ஹஃபிஸ் முஹமட் நோர் கூறினார்.

DashCam கேமராவை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேக கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் ஒரு Proton Saga ரக காரை மோதியுள்ளது.

பின்னர், அதே திசையின் அருகிலுள்ள பாதையில் இருந்த நான்கு வாகனங்களை மோதியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமட் ஹஃபிஸ் குறிப்பிட்டிருந்தார்.

விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களும் முற்றாக சேதமடைந்துள்ள வேலையில், Proton Saga ரக காரை ஓட்டிச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த தமது 4 வயது குழந்தையும் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக, அவர் கூறினார்.

இரண்டு கார்கள், ஒரு வேன் மற்றும் MPV ரக வாகனம் ஒன்று இவ்விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக, முஹமட் ஹஃபிஸ் கூறினார்.

Source : Bernama

#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews