உலகம்மலேசியா

ஆசியான் உச்சநிலை மாநாடு; வீட்டிலிருந்து வேலை செய்ய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், 07/05/2025 : இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது போக்குவரத்து நெரிசலில் பாதிப்படையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பொது சேவை ஊழியர்கள், BDR எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது அமலாக்கத்தில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது சேவை ஊழியர்களுக்கான BDR கொள்கை, சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்படுத்தப்படும் என்று பொது சேவை துறை, ஜே.பி.எ தெரிவித்துள்ளது.

பணியின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் நிறுவனத்தின் தேவைகளுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதோடு, நல்லிணக்கம் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், மனிதவள சேவையின் சுற்றறிக்கை MyPPSM வழியாக உருவாக்கப்பட்ட BDR கொள்கை நோக்கமாக கொண்டுள்ளதாக, ஜே.பி.எ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

உரிய பரிசீலனைக்காக தகுதி பெற்ற பொது சேவை ஊழியர்கள் அந்தந்த துறை தலைவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பொது சேவை வழங்குவதில் நல்வாழ்வு, கருணை மற்றும் செயல்திறன் போன்ற நிர்வாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளின் இந்நடவடிக்கையும் ஒன்றாகும் என்று ஜே.பி.எ அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாடு, இம்மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில், கோலாலம்பூர் மாநாட்டு மையம், கே.எல்.சி.சி-யில் நடைபெறவுள்ளது.

Source : Bernama

#ASEAN
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews