மலேசியாவட்டாரச் செய்திகள்

ஆபத்தான முறையில் வேனை செலுத்தி மரணம் விளைவித்த குற்றத்தை மறுத்தார் வியாபாரி

சிரம்பான், 07/05/2025 : மே 3-ஆம் தேதி, சிரம்பான், MATAHARI HEIGHTS-சில் வேன் ஒன்றை ஆபத்தான முறையில் செலுத்தி, மரணம் விளைவித்த குற்றத்தை வியாபாரி ஒருவர், இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தார்.

மாஜிஸ்திரேட் நூருல் ஃபர்ஹா சுலைமான் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட 45 வயதான பி.மோகன் அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.

சிரம்பான், பெர்சியாரான் சினாவாங் 1, MATAHARI HEIGHTS-சில் உள்ள சாலை சமிக்ஞை விளக்கு பகுதியில் இரவு மணி 11.59 அளவில் ஆபத்தான முறையில் வேனை செலுத்தி, 21 வயதான முஹமட் அன்னாஸ் இஸ்கண்டார் முஹமட் கைரிக்கு மரணம் விளைவித்ததாக மோகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டம் 333 அல்லது 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம், செக்‌ஷன் 41 உட்பிரிவு 1-இன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அதிகபட்சம் 50,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் விதிக்கப்படலாம்.

அதோடு, 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும் பெறுவதற்கும் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

வழக்கு முடியும் வரை குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாகனம் ஓட்டுனர் உரிமம் தடை செய்யப்படுவதோடு, 7,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க மாஜிஸ்திரேட் நூருல் ஃபர்ஹா சுலைமான் அனுமதியளித்தார்.

ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக வரும் ஜூலை 3-ஆம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source : Bernama

#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews