பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் தமிழ் விழா கலை அம்சத்துடன் கொண்டாட்டம்
பத்துமலை, 03/05/2025 : தமிழ் பற்றினை மாணவர்களிடையே மேலோங்க செய்யவும் தமிழின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தவும் பத்துமலைத் தமிழ்ப்பள்ளி பல திட்டங்களைச் செய்த வண்ணமாக இருக்கிறது. அவ்வகையில் 02 மே 2025 (வெள்ளிக்கிழமை) அன்று பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் திட்டமிட்டப்படி மாணவர்களுக்காகத் தமிழ் விழா மிகச் சிறப்பாய் கலை அம்சத்துடன் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டும் மாணவர்களிடையே தமிழ் பற்று மேலோங்கி காணப்பட்டது. அன்றைய தினத்தில் பல மாணவர்கள் தமிழ் புலவர்களின் வேடங்களை அணிந்து வந்தது பத்துமலைத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தமிழ் பற்றைப் பறைசாற்றியது.
நிகழ்ச்சியின் முதல் அங்கமாக வேடமிட்ட தமிழ்ப் புலவர்கள் அணிவகுத்துப் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன் அவர்களுடனும் துணைத் தலைமையாசிரியர்களுடனும் மண்டபத்திற்குள் நுழைந்தனர். பள்ளி மாணவர் செல்வன் யாஷ்னேஸ்வரன் அவர்கள் இறை வாழ்த்து பாடினார். தொடர்ந்து, பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன் அவர்கள் தமிழின் சிறப்பைப் பற்றியும் மாணவர்கள் அதிகமானோர் தமிழ் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உரையாற்றி தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான மாணவர்களின் பரதம் மற்றும் பாடல் இடம் பெற்றது. 30 ஏப்ரல் 2025 அன்று நடந்தேறிய பள்ளி அளவிலான திருக்குறள் மனனப் போட்டி, கவிதை ஒப்புவிக்கும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தலைமையாசிரியர் பரிசுகளை எடுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின் மாணவர்கள் வழக்கம்போல் தங்களின் கற்றல் கற்பித்தலைத் தொடர்ந்தனர்.#TamizhVizha2025
#SJKTBatuCaves
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
#SJKTBatuCaves
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews