போதைப்பொருளை விநியோகித்ததாக ஆடவர் மீது குற்றப்பதிவு
பத்து பஹாட், 02/05/2025 : கடந்த மாதம், 20 கிலோகிராம் ஷாபு வகைப் போதைப் பொருளை விநியோகித்ததாக வேலையில்லா ஆடவர் இன்று பத்து பஹாட் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
36 வயதுடைய முஹமட் நூர் ஹஸ்ரெக் கைருடினுக்கு எதிரான குற்றச்சாட்டு, மஜிஸ்திரேட் நூரசிடா ஏ ரஹ்மான் முன்னிலையில் வாசிக்கப்பட்டாலும், இவ்வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, பத்து பஹாட், மிஞ்ஞாக் பெக்கு, லோரோங் 3, 1/7-இல், 20,712 கிராம் எடைக் கொண்ட Methamphetamine வகை போதைப் பொருளை விநியோகித்ததாக முஹமட் நூர் ஹஸ்ரெக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம், செக்ஷன் 39B(1)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்க வகைச் செய்யும் அதேச் சட்டம் செக்ஷன் 39B(2)-இன் கீழ் தண்டனை வழங்கப்படும்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு, ஜூன் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Source : Bernama
#CrimeNews
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews