நேதாஜி, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

நேதாஜி, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

Bharat_Ratna_300

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது, இதுவரை 43 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த முறை பாரத ரத்னா விருதை நேதாஜிக்கும், வாஜ்பாய்க்கும் வழங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை வரும் 15-ம் தேதி தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த விருதை வழங்கும் நடைமுறையைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பரிந்துரை கடிதம் அனுப்பினாலே போதுமானதாகும்.

2013-ம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுகள், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டது.