பாங்கி, 07/03/2025 : மதப் பிரச்சனைகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தி இருக்கின்றார்.
குறிப்பாக, சுய நலனுக்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு கட்சி அல்லது சமுதாயத் தலைமைத்துவத்திற்கும் அவர் அதனை வலியுறுத்தினார்.
”நாம் தொடர்ந்தால், அது மக்களைப் பாதிக்கும். ஆனால், அரசாங்கத்தின் அணுகுமுறை உறுதியாக இருக்க வேண்டும். மனித கண்ணியம் மற்றும் மதத்தை இழிவுபடுத்துவதை அனுமதிக்கப்படாது. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அது கூடாது. இஸ்லாம் நாம் மதிக்கும் அதிகாரப்பூர்வ மதம். ஆனால், நாம் நல்லிணக்கத்தை பேணுகிறோம். ஆகவே, நான் இந்த அறிவுறுத்தலைச் செய்கிறேன். அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர், அது உங்களை அழிக்கும்”, என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தப் போது அன்வார் இப்ராஹிம் அவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களுக்காக மதப் பிரச்சனைகளை இனி பயன்படுத்தாமல் இருக்க அனைத்து தரப்பினரும் விதிமுறைகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.