கோலாலம்பூர், 22/02/2025 மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகப் பயிற்சி 22.02.2025 நாளான்று கோலாலம்பூரிலுள்ள IKP கழகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது என்று பேரவையின் தேசியத் தலைவர் திரு முருகன் மணியம் தெரிவித்தார்.
இப்பயிற்சியினைத் தேசிய அகாடமி கழகத்தின் சிறப்பு அதிகாரி மதிப்புமிகு திரு முகாமட் ஆரிப் சாம்சன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார். நாடு தழுவிய அளவில் 100க்கும் மேற்பட்ட மணிமன்றத் தலைவர்களும் பொறுப்பாளர்களும் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். மணிமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறனை மேம்படுத்துதல், முடிவெடுக்கும் திறனை வளர்த்தல், திறமையான நிர்வாக ஆற்றலைக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவை இப்பயிற்சியின் முகாமை நோக்கங்களாகும்.
இப்பயிற்சியில் தலைமைத்துவப் பண்புகள், மணிமன்ற வரலாறு, நிர்வாக அமைப்பு முறைகள், MYKD மேலாண்மை, இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் களையும் உத்திகள் உள்ளிட்ட முக்கியத் தலைப்புகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன. சமூக மாற்றங்களை நிகழ்த்தும் வகையில் இளைஞர்கள் தங்களைத் தயார்செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணக்கருவோடு, பல புதிய உத்திகள் மற்றும் செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து, இளைஞர்களுக்கு உயர்ந்த பண்புகளுடன் தலைமைத்துவத் திறன் வளர்க்கும் விதமாக இந்தப் பயிற்சி அமைவதோடு எதிர்காலத் தலைவர்களாக உருவாக இளம் தலைமுறைக்கு இதுபோன்ற பயிற்சிகள் அவசியம் எனப் பேரவையின் தேசியத் தலைவர் திரு முருகன் மணியம் தெரிவித்தார்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசிய அளவிலான தலைமைத்துவப் பயிற்சி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளித்துள்ளது வேளையில் எல்லா நிலையிலும் இப்பயிற்சி சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் காரணியாக அமைந்தது என மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் புகழாரம் சூட்டினர்.
#MajlisKelabBellBeliaTamilMalaysia
#NationalConference
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.