என் தமிழ்

விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கட்டம் கட்டமாகத் தான் வரவழைக்கப்பட முடியும்:அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன்

Body

MH 17 விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கட்டம் கட்டமாகத் தான் தாயகத்திற்கு வரவழைக்கப்பட முடியும் என தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார். முதலில் எல்லா சடலங்களையும் ஒரே நேரத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தாலும், உறவினர்களின் கோரிக்கை மற்றும் சடலங்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அந்நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.