என் தமிழ்

JS-SEZ மலேசியா, சிங்கப்பூர் இடையே பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது – பிரதமர்

புத்ராஜெயா, 07/01/2025 : ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (JS-SEZ) செயல்படுத்துவது பிராந்திய அளவில் ஒரு முக்கியமான ஒத்துழைப்பாகக் கருதப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

இந்த வெற்றி தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் விளக்கினார்.

“மலேசியாவின் முக்கிய இருதரப்பு முதலீட்டாளர் மற்றும் வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் உள்ளது. குறிப்பாக ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மூலம் இந்த உறவை வலுப்படுத்த நாங்கள் உத்தேசித்துள்ளோம், இது பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒரு மிக முக்கிய முயற்சியாக நான் கருதுகிறேன்.” என பிரதமர் கூறினார்.

“ஜோகூர் மற்றும் மலேசியாவிற்கு மட்டுமின்றி, சிங்கப்பூர் மற்றும் பிராந்தியம் முழுவதும் இந்த முயற்சியின் வெற்றியை உறுதி செய்ய (சிங்கப்பூர்) பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் நெருக்கமாக பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று 11வது மலேசியா-சிங்கப்பூர் அதிகாரிகளின் சந்திப்பு கூட்டத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அன்வர் கூறினார்.

வோங்குடனான சந்திப்பில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நீர் வளங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சிங்கப்பூருடன் நீர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மலேசியா மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், அதில் தற்போது ஆய்வு செய்யப்படும் அளவுருக்கள் குறித்து விவாதிப்பது உட்பட என்றும் அவர் விளக்கினார்.

தொழில்நுட்பக் குழு கலந்துரையாடலில் பொருத்தமான அளவுருக்களை தீர்மானிக்கும் என்று அன்வார் தெரிவித்தார்.
“தொழில்நுட்பக் குழு அளவுருக்கள் பற்றி விவாதிக்கும், மேலும் தீபகற்பம் வழியாக சிங்கப்பூருக்கு RDC கேபிளைப் பயன்படுத்தி எரிசக்தி ஏற்றுமதி செய்வது தொடர்பாக சரவாக் அரசாங்கத்தின் சிறப்பு முன்மொழிவையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கல்வி, எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் JS-SEZ ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு தலைவர்களும் பார்வையிட்டனர், அவை இரு நாடுகளுக்கும் பெரும் நன்மை பயக்கும்.

செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, செரி பெர்டானாவில் பிரதமர் வோங்கிற்கு மதிய விருந்தளித்தர். மதிய விருந்தில், 18வது தேசிய வகை பள்ளி (1) யைச் சேர்ந்த 60 ஆறாம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், சரவாக் பிரதமர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபங் மற்றும் ஜோகூர் முதல்வர் டத்தோஸ்ரீ ஹாபிஸ் காசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வோங் மற்றும் அவரது குழு, 11வது மலேசியா-சிங்கப்பூர் தலைவர்கள் தீர்வு அமர்வில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று மலேசியா வந்தடைந்தது.

முன்னதாக, கோம்ப்ளெக்ஸ் பெர்டானா புத்ராவில் வோங்கிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அன்வாருடனான சந்திப்பும் நடைபெற்றது

Source : Berita

#MalaysiaSingapore
#PMAnwar
#JS-SEZ
#JohorSingaporeSpecialEconomicZone
#pmsingapura
#LawrenceWong
#SAMBUTAN RASMI
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Scroll to Top