லெபனானிலிருந்து அறுவர் இன்று நாடு திரும்பினர்

லெபனானிலிருந்து அறுவர் இன்று நாடு திரும்பினர்

கோலாலம்பூர், 06/10/2024 : இன்று காலை, லெபனானிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு மலேசியர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், KLIA-வை வந்தடைந்ததை வெளியுறவு அமைச்சு உறுதிபடுத்தியது.

லெபனானிலிருந்து மலேசியர்களை அழைத்து வரும் நடவடிக்கையின் அண்மைய தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் அறுவர் நாடு திரும்பவர் என்று அமைச்சு கூறியது.

இதன்வழி, கடந்த இரு நாள்களில் லெபனானிலிருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை 17-ஆக பதிவாகியுள்ளது.

லெபனானில் மிகவும் நெருக்கடியான சூழல் நிலவி வந்தாலும் அங்கிருக்கும் அனைத்து மலேசியர்களும் நாடு திரும்புவதற்கு ஏதுவாக விமான பயணங்களை பெய்ரூட்டில் உள்ள மலேசிய தூதரகம் நிர்வகித்து வருவதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.

வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேலும் சில மலேசியர்கள் நாடு திரும்பவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Bernama

#Lebanon
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.