GISBH: 9 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

GISBH: 9 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

ஷா ஆலம், 04/10/2024 : G-I-S-B-H நிறுவன மூத்த தலைவரின் மனைவிகள் உட்பட ஒன்பது பேருக்கான தடுப்புக் காவலை ஒரு நாள் மற்றும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்க ஷா ஆலம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கிய அவர்களின் ஏழு நாள்களுக்கான தடுப்பு காவல் இன்றுடன் நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலீசாரின் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், 18-இல் இருந்து 55 வயதுக்கு உட்பட அவர்களின் தடுப்புக் காவல் நீட்டிப்பை மாஜிஸ்திரேட் எம்.மகேஸ்வரி வெளியிட்டார்.

இன்று காலை மணி 10.15 அளவில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் கடுமையான கட்டுப்பாட்டில் அவர்கள் அனைவரும் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அந்த ஒன்பது பேரில், இரு ஆண்கள் உட்பட ஏழு பெண்களும் அடங்குவர்.

அவர்களில் நால்வர் GISBH நிறுவன மூத்த தலைவரின் மனைவிகள் என்று நம்பப்பட்டது.

Source : Bernama

#GISBH
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.