என் தமிழ்

உலக துப்புரவு தினம் 2024

சுபாங் ஜெயா, 12/09/2024 : சுபாங் ஜெயா நகரண்மை கழகம் மற்றும் சன்வே ரிசார்ட் ஹோட்டல் இணைந்து குப்பைகளை சுத்தம் செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகளை உலக துப்புரவு தினம் 2024 ஆன 11 செப்டெம்பர் அன்று மேற்கொண்டன.

சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறை, எம்பிஎஸ்ஜே மற்றும் சன்வே ரிசார்ட் ஹோட்டல் ஆகியவற்றின் பணியாளர்கள் அடங்கிய மொத்தம் 91 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சேகரிக்கப்பட்ட குப்பையின் அளவு 150.85 கிலோவாகும், வெற்றிகரமாக சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி பொருட்கள் 239.20 கிலோவாகும். மேலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கழிவுகளை பிரிக்கும் பிரச்சாரம் குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெற்றது.

Scroll to Top