12 பெண் சாதனையாளர்களுக்கு உத்வேக மகளிர் பாராட்டு விருது

12 பெண் சாதனையாளர்களுக்கு உத்வேக மகளிர் பாராட்டு விருது

பினாங்கு, 03/09/2024 : மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவையின் மகளிர் பிரிவினால் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட “உத்வேக மகளிர் பாராட்டு விருது 2024” விழாவின் விருந்து நிகழ்வு  ஆகஸ்ட் 30,2024 அன்று பினாங்கு, ஜாலான் மேகசின், செயின்ட் கில்ஸ் ஹோட்டலில் நடைப்பெற்றது.

லிம் சீவ் கிம் சமூக மேம்பாடு மற்றும் நலன் எஸ்கோ (முஸ்லீம் அல்லாதவர் பிரிவு தலைவர்) அதிகரபூர்வமாகத் துவக்கி வைத்த இவ்விழாவில் டத்தோ ஓங் பீ லெங் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ஃப்ளோரன்ஸ் சின்னியா SNEHAM இன் தலைவர், தொண்டர்மணி டாக்டர் கலைவாணி PKT.PJK மலேசிய இந்து சங்கம் தேசிய பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு தலைவி மற்றும் துணைத் தலைவி பினங்கு பேரவை, விவேகா ரத்னா தர்மன் ஆனந்தன் PKT.PJK. PJM மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவையின் தலைவர், திருமதி மேகலா மகளிர் பிரிவு தலைவி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேலும், இந்த விழாவில் மாநில எக்ஸ்கோகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மகளிர் பிரிவினர் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநில மற்றும் உள்ளாட்சி மன்றத்திற்கு தங்கள் நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த பெண்களின் சாதனைகளை உத்வேக மகளிர் விருதுகள் அங்கீகரிக்கின்றன. மலேசிய இந்து சங்கத்தில் தனது செயல்கள் மற்றும் சாதனைகளின் மூலம் அசாதாரணமான செயல்களைச் செய்த பெண்களைக் கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் விழா நம்பமுடியாத ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ளது, அந்தந்த சபையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிப்பதில் புதிய அளவுகோல்களை அமைத்துள்ளது. மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவையின் மகளிர் பிரிவால் பரிந்துரைக்கப்பட்ட 12 பெண் சாதனையாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.