விஜயலட்சுமியை தேடும் முயற்சிகள் மீண்டும் முடங்கியுள்ளன.

விஜயலட்சுமியை தேடும் முயற்சிகள் மீண்டும் முடங்கியுள்ளன.

கோலாலம்பூர், 30/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கி காணாமல் போன சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சாக்கடையில் மூழ்கி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மீண்டும் முடங்கியுள்ளன.மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நீர்மூழ்கி குழுவின் அகடமியில் இருந்து இரண்டு ஸ்கூபா டைவர்ஸ் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 44 மீட்டர் தொலைவில் அடைப்பு இருப்பதாக நம்பப்படும் பகுதிக்கு அதிகாலை 4 மணியளவில் குழாயின் துளைக்குள் இறங்கத் தொடங்கினர்.
சுமார் அரை மணி நேரம் கழித்து வெளியேறியவர்களிடம் எந்த ஒரு தடையமும் கிடைக்கவில்லை. உள்ளடைப்பில் மணல் மற்றும் கற்கள் அதிகமாக இருப்பதேடு நீரேட்டமும் அதிவேகமாக இருப்பதால் நீர்மூழ்கியினர் சவால்களை எதிர் நோக்கியுள்ளனர்.
விடியற்காலை 5 மணிக்கு தேடல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்படும்.


புகைப்படங்கள் : பெர்னாமா முகநூல்