தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி, சீன குடியரசின் முன்னாள் படைவீரர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மா ஃபெய் க்ஷிஹொங் உடன் இருதரப்பு சந்திப்பு

தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி, சீன குடியரசின் முன்னாள் படைவீரர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மா ஃபெய் க்ஷிஹொங் உடன் இருதரப்பு சந்திப்பு

கோலாலம்பூர், 30/08/2024 : மலேசியாவின் தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி, சீன குடியரசின் முன்னாள் படைவீரர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மா ஃபெய் க்ஷிஹொங் உடன் இருதரப்பு சந்திப்பு ஒன்றை விஸ்மா பெர்விராவில் நடத்தினார்.

மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஆராயக்கூடிய பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இரு தலைவர்களும் படைவீரர்களின் மேலாண்மை மற்றும் நலன் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அதே நேரத்தில், சீனாவின் பெய்ஜிங்கில் செப்டம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருக்கும் க்ஷிஹன்ஷென் மாநாட்டிற்கு அமைச்சர் அட்லியின் வருகையை துணை அமைச்சர் மா ஃபெய் க்ஷிஹொங் வரவேற்றார். மலேசியாவின் தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி மாநாட்டில் முக்கிய உரை ஆற்றுவார்.