விமர்சகன் ஏற்பாட்டில் Saree Pre Pleating பயிற்சி : ரத்னவள்ளி அம்மா வாழ்த்து

விமர்சகன் ஏற்பாட்டில் Saree Pre Pleating பயிற்சி : ரத்னவள்ளி அம்மா வாழ்த்து

கோலாலம்பூர், 26/08/2024 : பெண்கள் சுயத் தொழிலில் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற நோக்கத்திற்காக Saree Pre Pleating எனும் சேலையை நேர்த்தியாக கட்டும் ஒருநாள் பயிலரங்கம் விமர்சகன் மீடியா ஏற்பாட்டில் 25/08/2024, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

25 பெண்கள் கலந்து கொண்ட இந்த சிறப்பு பயிற்சிக்கு மனிதநேய தம்பதியர் அம்மா ரத்னவள்ளி மற்றும் ஐயா விஜயராஜ் சௌத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த ஒருநாள் பயிற்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலகுவான முறையில் சேலையை மடிப்பு எடுத்து அதனை ironing செய்யும் முறையும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

இளம் பெண்கள், குடும்ப பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள் என பல பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அம்மா ரத்னவள்ளி, பெண்கள் சுயக்காலில் நிற்க பழகி கொள்ளவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலம் பெண்கள் கைத்தொழிலைக் கற்றுக்கொண்டு சுயவருமானத்தை பெருக்கி கொள்ள முடியும் என்று ரத்னவள்ளி அம்மா குறிப்பிட்டார்.

பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மன உறுதி வேண்டும். தாம் இன்று இந்த நிலைக்கு வருவதற்கு பல்வேறு தடைகளைத் தாண்டி வந்துள்ளதாக ரத்னவள்ளி அம்மா கூறினார்.

தாம் கடந்து வந்த பாதையின் நிகழ்வுகளை அங்கு வந்த பெண்களுக்காக சொன்னார். அவர் கூறியவை அங்கு வந்த பெண்களுக்கு தன்னம்பிக்கையை வரவழைக்கும் வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு, மாலையில் தேநீர் வழங்கப்பட்டதுடன், பயிற்சிக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நற்சான்றிதழ்களை எடுத்து வழக்கினார்கள் ரத்னவள்ளி அம்மாவும் விஜயராஜ் ஐயாவும்.

இதுபோன்ற பெண்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த விமர்சகன் மீடியாவுக்கு தமது ஆதரவை தொடர்ந்து வழங்குவதாக அம்மா உறுதி கூறினார்.

இந்தப் பயிற்சியை சிறப்பாக வழிநடத்திய பயிற்றுநர் திருமதி லலிதா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் ரத்னவள்ளி அம்மா.

இதே போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து திட்டமிட்டிருப்பதாக விமர்சகன் மீடியா நிர்வாகியும் தோற்றுநருமான SP சரவணன் தெரிவித்தார்.