பிரதமர் மோடி உக்ரைன் பயணம் : உக்ரைன் அதிபரை சந்தித்தார்

பிரதமர் மோடி உக்ரைன் பயணம் : உக்ரைன் அதிபரை சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 23/08/2024 உக்ரைன் நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த மெரின்ஸ்கி அரண்மனையில் சந்தித்தார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெயசங்கர் மற்றும் பலரும் உக்ர்சினுக்கு பயணித்துள்ளனர்.

இரண்டு தலைவர்களுக்கிடையே நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த உயர் மட்டக் குழு சந்திப்பும் நடைபெற்றது. ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

முன்னதாக தலைநகர் கீவ்வில் உள்ள ஹயாட் ஹோட்டலுக்கு வந்த போது பிரதமர் மோடிக்கு இந்திய சமுதாய மக்களும் மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி கீவ்வில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.