மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்

மலேசியா மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக் கொள்ளப்பட்டது. இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை, கலாச்சாரம், சுற்றுலா துறை மற்றும் பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.
இந்நிகழ்வில் 2வது இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்திய பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில், மலேசியா மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) பரிமாறிக் கொள்ளப்பட்டது.

103