இந்தியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வமான அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஏழு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று கையெழுத்தானது.
இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஷ்டிரபதி பவனில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா
