67-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் 200,000 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள்- ஃபஹ்மி

67-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் 200,000 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள்- ஃபஹ்மி

ஆகஸ்ட் 31-ம் தேதி புத்ராஜெயா தேசிய மைதானத்தில் நடைபெறவிருக்கும் தேசிய தின விழாவில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்த போதுமான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதென தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
HKHM 2024 கொண்டாட்டங்களுக்கான முதன்மைக் குழுவின் தலைவரான ஃபஹ்மி இவ்வருட 67-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் 200,000 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்பதாக கூறினார். இவர்கள் தேசிய தின கொண்டாடத்தை முழுமையாக கண்டுக்களிக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதென தெரிவித்தார்.