ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்கள் 50 பேரை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சி வீடியோ வெளியீடு

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்கள் 50 பேரை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சி வீடியோ வெளியீடு

nigeriashaiya

ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் அங்கு வசிக்கும் ஷியா முஸ்லிம்களை கொடூரமாக கொன்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய நேரத்திலும் அவர்கள் ஷியா முஸ்லிம்கள் ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர்.

இதில் 50 பேரை கொல்லும் காட்சியை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 50 பேரையும் 2 வேன்களில் ஏற்றி ஒரு பகுதிக்கு போராளிகள் அழைத்து செல்கிறார்கள். பின்னர் அவர்களை வேனில் இருந்து இறக்கி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது அவர்கள் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு குணிந்தபடி நடந்து செல்கின்றனர்.

iss iss1

அங்குள்ள ஆற்று ஓரமாக அவர்கள் அனைவரையும் குணிந்தபடி உட்கார வைக்கின்றனர். அதைத்தொடர்ந்து சுற்றிநிற்கும் போராளிகள் அவர்களை ஒவ்வொருவராக சுட்டுக்கொல்கின்றனர். பின்னர் பிணத்தை தண்ணீரில் வீசிவிட்டு போராளிகள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.

இந்த கோரக்காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவருமே 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.