கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த பயங்கர நிலச்சரிவில் 418 பேர் பலியான நிலையில், இன்னும் 131 பேரை காணவில்லை. நேற்று பிரதமர் மோடி அதிகாரிகளுடன் வயநாடு பகுதியை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கியிருந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். நிலச்சரிவு புனரமைக்கும் பணிக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என பிரதமருக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் மனு அளித்தார்.





