இலங்கை இனப்படுகொலை: ஐநா விசாரணை குழுவுக்கு விசா வழங்க அதிமுக வலியுறுத்தல்

இலங்கை இனப்படுகொலை: ஐநா விசாரணை குழுவுக்கு விசா வழங்க அதிமுக வலியுறுத்தல்

Tamil

பாராளுமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவர் எம்.தம்பித்துரை பாராளுமன்ற கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:- 

இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசிக்கிறார்கள். விசாரணைக்காக வரும் ஐ.நா. குழுவினருக்கும் இங்குள்ள தமிழர்களிடம் விசாரணை நடத்தினால் இனப்பிரச்சினையில் இலங்கை அரசு நடந்து கொண்ட விதம் பற்றியும் அவர்களது விசாரணைக்கும் உதவியாக இருக்கும். 

எனவே ஐ.நா. குழுவுக்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும். இலங்கை பிரச்சினையில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.