அனுஷ்கா நகைகளை அபேஸ் செய்த 3 பேர் கைது

அனுஷ்கா நகைகளை அபேஸ் செய்த 3 பேர் கைது

Anushka Shetty at MBS Jewellers Patny Centre Showroom

அனுஷ்கா படத்துக்கான 1.5 கிலோ தங்க நகைகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்தது. இது சரித்திர கால படம். ராணியாக அனுஷ்கா நடிக்கிறார். பழங்கால டிசைனில் உள்ள ஒரிஜினல் தங்க நகைகளை படத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து ஊழியர் ரவி சுப்பிரமணியம் நகைகளை கொண்டு வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நேற்று முன்தினம் மாலை நகைககள் திடீரென மாயமானது. இது குறித்து தயாரிப்பாளர் ராம்கோபால், சைபராபாத் காஜிபவுலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த போலீசார், அங்கிருந்து யாரையும் வெளியே போகவிடாமல் தடுத்தனர். பின் ஒவ்வொரு நபராக அழைத்து விசாரித்தனர். இதில் கடை ஊழியர் ரவி சுப்பிரமணியம், மேக்அப் பொருட்களை கொண்டு வரும் வேனின் டிரைவர், மற்றொரு ஊழியர் சேர்ந்து நகைகளை அபேஸ் செய்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.