தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

நவம்பர் 24, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் இரு தரப்பும் இணைந்து தயாரிப்பது குறித்து கவனத்தில் கொள்ள இரு நாடுகளும் விரும்புவதாக கூறினார். மேலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இரு நாடுகளும் ஒரு பொதுவான நிலையை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்தை நிராகரித்து தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.