டெல்லி: ட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொலை

டெல்லி: ட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொலை

blank-911-gun

தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெற்கு டெல்லியின் மஹிபால்பூர் பகுதியை சேர்ந்தவர் தர்ஷன்(30). டாக்சி டிரைவரான இவர், நேற்று பிற்பகல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எதிரே உள்ள பிரபல 5 நட்சத்திர ஓட்டலின் அருகே ஒரு கோயிலின் வாசலில் நின்றுக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த 4 பேர் சற்றும் எதிர்பாராத நிலையில் கை துப்பாக்கிகளால் தர்ஷனை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். உடலின் பல பகுதிகளில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தர்ஷன், துடிதுடித்து உயிருக்கு போராடினார். 

இதை கண்ட சிலர் அவரை ஒரு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கொலையாளிகளை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பரபரப்பு நிறைந்த விமான நிலையத்தின் அருகில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.