பள்ளி பஸ்சில் நல்ல பாம்பு டிரைவர் தப்பி ஓட்டம்

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

நவம்பர் 19, முறையாக சோதிக்கப்படாமல் இயக்கப்பட்ட பள்ளி பஸ்சில் நல்ல பாம்பு படம் எடுத்து ஓடியது.  இதைக் கண்டதும் டிரைவர், மாணவர்களை அப்படியே தவிக்கவிட்டு விட்டு தப்பி ஓடினார்.வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து காட்பாடிக்கு இன்று காலை இயக்கப்பட்ட ஒரு தனியார் பள்ளி பஸ்சில் திடீரென ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியது. அதைக் கண்டதும் பஸ்சின் டிரைவர், மாணவர்களைப்பற்றி கவலைப்படாமல், தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள பஸ்சிலிருந்து இறங்கி தப்பி ஓடினார். பஸ்சிலிருந்த 40 மாணவர்களும் அலறி அடித்துக் கொண்டு பஸ்சிலிருந்த குதித்து தப்பினர். உடனே அங்கு திரண்ட பொதுமக்கள் 20 நிமிடம் போராடி அந்த பாம்பை அடித்துக் கொன்றனர்.  பின்னர் தப்பி ஓடிய பஸ் டிரைவரை பிடித்து வந்து, மாணவர்களைப் பொறுப்பில்லாமல் தவிக்க விட்டு விட்டு ஓடியதற்சகாக அந்த டிரைவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தனர். மழைக்காலத்தில் நிறுத்தப்படட்டுள்ள பஸ்சில் இவ்வாறு பாம்பு போன்றவை குடிபுக வாய்ப்புள்ளது,  இதைக் கருத்தில் கொண்டு பஸ்சை இயக்க எடுக்கும் முன் நன்கு சோதனை செய்ய வேண்டு ம் என்ற எண்ணம் இல்லாமல் இருந்ததே இந்த பரிதாப நிலைக்கு காரணம்.