செப்டம்பர் 22, தேசிய கல்வியியல் விருதளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அந்நிய நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் நாட்டிற்கு 15 மில்லியன் ரிங்கிட் வரை பொருளாதாரம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். 2020-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அந்நிய நாட்டவர்களின் எண்ணிக்கையை 200,000-ஆக அதிகரிக்க உயர்க்கல்வி அமைச்சகம் முன்வர வேண்டும் என்று பிரதமர் கோட்டுகொண்டார்.






