தமிழ்நாட்டில் மீண்டும் மின் தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் மீண்டும் மின் தட்டுப்பாடு

eb

செப்டம்பர் 9, தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததல் மீண்டும் மின் தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது. இதனால், பகல் நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தினமும் பகல் நேரங்களில் 15 நிமிடங்கள், 20 நிமிடங்கள் என்ற அளவில் ஏரியா வாரியாக பிரித்து பிரித்து மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு ஒரு வார காலமாக அரை மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.