என் தமிழ்

லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை

arrest

ஏப்ரல் 30, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அளிக்கப்படும் சிறை தண்டனையை அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக ஆக்கிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் அத்தகைய வழக்குகளை இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்கவும் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. இந்த சட்டத்திருத்தத்தின்படி லஞ்சம் வாங்குபவருக்கு மட்டும் அல்லாமல் லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை அளிக்கப்படும்.

Scroll to Top