நாளையுடன் விடைபெறுகிறார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க்

நாளையுடன் விடைபெறுகிறார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க்

clrke

மார்ச் 28, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.

மைகேல் கிளார்க் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வருகிறார்.

நீண்ட நாட்களாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் கிளார்க் நாளை நடைபெறும் இறுதி ஆட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது ஓய்வு அறிவிப்பை தெரிவித்தார். இதனால் நாளைய போட்டி அவருக்கு உணர்ச்சிகரமான போட்டியாக இருக்கப்போகிறது.