பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

brac

மார்ச் 24, ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 148 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனை விமான போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.