டெல்லி மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது

டெல்லி மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது

download (25)

மார்ச் 4, டெல்லியில் இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி முகேஷ் சிங் என்பவரிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி கண்டார். உலக பெண்கள் தினமான வரும் 8-ந் தேதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப பி.பி.சி. தொலைக்காட்சி திட்டமிட்டிருந்தது. நிர்பயா கொலை குறித்த ஆவணப்படம் ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாகவும் பேட்டி காண அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியா தடை விதித்துள்ள போதும், நேற்றிரவே நிர்பயா குறித்த ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது. பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. ஆவணப்படத்தை பார்ப்பதற்கான விருப்பம் அதிகரித்ததால், முன் கூட்டியே ஒளிபரப்பியதாக பி.பி.சி. கூறியுள்ளது.