பன்றி காய்ச்சலுக்கு இந்தியாவில் 663 பேர் பலி

பன்றி காய்ச்சலுக்கு இந்தியாவில் 663 பேர் பலி

swine

பிப்ரவரி 20, இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.  நாகலாந்து போன்ற புதிய இடங்களில் வைரஸ் பரவுவதால் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.கடந்த பிப்ரவரி 16,17ந்தேதிக்கு இடையில் 39 பேரை வைரஸ் தாக்குதல் பலி கொண்டுள்ளது.  இதனால் அதன் தீவிரம் குறையவில்லை என்பதை அதன் எண்ணிக்கை காட்டுகிறது. ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக மோசமாக முறையே 183,155 மற்றும் 90 பேர் பலியாகியுள்ளனர். பஞ்சாபில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தும் அருகே உள்ள ஹரியானாவில், மொத்த பலி எண்ணிக்கை 17 ஆகவும் உள்ளது.உத்தர பிரதேசத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.