பிப்ரவரி 17, நேற்று மஇகாவின் துணைத்தலைவர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் மாண்புமிகு தெங்கு அட்னான் ஆகியோர் பிரதமரை சந்தித்துள்ளனர். ம.இ.காவில் மறுதேர்தல் நடைபெறும் வரையில் கட்சியை தேசிய முன்னணி செயலகம் வழிநடத்தும் என்று தெங்கு அட்னான் பரிந்துரை செய்திருந்தார். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
ROS தலையீட்டுக்கு எதிராக வழக்கறிஞர் மனுக்களையும் தயார் செய்யுமாறு டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார். ம.இ.கா கட்சி விவகாரத்தில் தேசிய முன்னணி தலையிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ROS தலையீட்டுக்கு எதிராக டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் வழக்கு
