தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி

தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி

flightriver

பிப்ரவரி 4, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.

தைவான் தலைநகர் தைபே நகரில் இருந்து காலை கின்மெனுக்கு டிரான்ஸ் ஏசியா ATR 72-600 டர்போப்ராப் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதியது .பின்னர், கீலங் ஆற்றுக்குள் விழுந்தது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.