பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: 4 தீவிரவாதிகள் கைது

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: 4 தீவிரவாதிகள் கைது

Tehrik-e-taliban-620x465

ஜனவரி 28, பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் கடந்த 7-ந் தேதி ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து பல்வேறு தாக்குதல்கள் அரங்கேறின. இந்த தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அங்குள்ள லுனல் நகரில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையிட முயற்சிப்பதாக ஊடகங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து உஷார் அடைந்த போலீசார் நகரின் பல பகுதிகளிலும் தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேட்டையை நடத்தினர்.

இதில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரிட்டு விட்டு திரும்பிவந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.