புதிதாக 5 ஐ.ஐ.டி, 5 ஐ.ஐ.எம்.கள்

புதிதாக 5 ஐ.ஐ.டி, 5 ஐ.ஐ.எம்.கள்

img_3141

நாடு முழுவதும் புதிதாக 5 ஐ.ஐ.டி. மற்றும் 5 ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதிதாக 5 ஐ.ஐ.டி. மற்றும் 5 ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப் பிரதேசம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களில் தலா ஒரு ஐ.ஐ.டி. உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், பிகார், ஒடிஸா, மகாராஷ்டிரம் ஆகிய 5 மாநிலங்களில் தலா ஒரு ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.