திரிங்காப் பகுதியில் திடீர் நிலச்சரிவு: கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு வயது குழந்தை பலி

திரிங்காப் பகுதியில் திடீர் நிலச்சரிவு: கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு வயது குழந்தை பலி

Earthquake

டிசம்பர் 30, கேமரன் மலை, திரிங்காப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் கர்ப்பிணி பெண் உட்பட அவரது ஒரு வயது குழந்தையும் பலியாகியுள்ளனர்.
இன்று காலை 5.29 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 24 வயது நிறம்பிய நித்தியாவதியும் அவரது ஒரு வயது குழந்தை ரூபனீஸ்வரனும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இறக்கும் போது நித்தியாவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் பலியான நித்தியாவதியின் கணவர் ராஜா அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நித்தியாவதியும் அவரது குழந்தையின் உடலும் இன்று காலை 8.03 மணி அளவில் இடிப்பாடுகளிக்கிடையே கண்டெடுக்கப்பட்டது. இவரின் கணவர் ராஜாவோ காலை 7 மணி அளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.