திரங்கானுவில் கடுமையான வெள்ளம்

திரங்கானுவில் கடுமையான வெள்ளம்

Rain01

டிசம்பர் 20, கடந்த சில வாரங்களாக திரங்கானுவில் கடுமையான வெள்ளம் எற்பட்டுள்ளது. இந்நிலையில், பெசுட் வட்டாரத்தில் வெள்ளத்தின் நிலை இன்று மோசமடைதிருப்பதாக கூறப்படுகிறது.
பெசுட் பகுதியிலிருந்து மட்டும் 3257 பேர் இடமாற்றம் அடைந்திருப்பதாக தகவல் கூறுகின்றன. மேலும், திரங்கானுவில் மற்ற பகுதிகளிலிருந்து 2507 குடும்பங்களைச் சேர்ந்த 8613 பேர் அப்பகுதியில் உள்ள 122 பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றலாகியுள்ளனர்.
தொடர்ந்து, டுங்குன் வட்டாரத்தில் 2231 பேரும், கெம்மாமானில் 1925 பேரும் ஹுலு திரங்கானு பகுதிகளில் 271 பேரும் பாதுகாப்பு மையங்களுக்கு தஞ்சம் புகுந்திருப்பதாக திரங்கானு வெள்ள நிவாரண மையம் தெரிவித்துள்ளது.