சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் பிரியா ஆனந்த்

சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் பிரியா ஆனந்த்

priyaa

டிசம்பர் 10, பிரியா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’. இதில் விமல் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து பிரியா ஆனந்த், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவரும் ‘வை ராஜா வை’ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு சந்தானத்துடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷிடம் உதவியாளராக பணியாற்றியவர் அருண் பிரசாத். இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் சந்தானம், ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தில் நடித்த சேது, சக்தி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இந்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளனர்.