தமிழகத்தின் தொடர் மழை

தமிழகத்தின் தொடர் மழை

rain_0

நவம்பர் 13, அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

தலைநகர் சென்னையில் நேற்று நாள் முழுவதும் கனமழை பெய்தது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், நாகை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடிப்பதால் கனமழையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.