நவம்பர் 10, துணைப்பிரதமரும் கல்வியமைச்சருமான டான் ஶ்ரீ முகிதின் யாசின் நகோயாவில் நடைபெறும் யுனெஸ்கோவின் கல்வி வளர்ச்சி மீதான மாநாட்டில் கலந்துகொண்டார். இரண்டு நாள், அலுவல் பயணமாக தனது துணைவியார் புவான் ஶ்ரீ நோராயினி அப்துல் ரஹ்மானோடு நகோயா சென்றார்.
நகோயா காங்கிரஸ் மையத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் இன்று வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
